×

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

ஆலங்குளம், ஜன.9: ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆலங்குளம் அருகேயுள்ள காசிநாதபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டியின் மனைவி மின்னல்கொடி (80). இவர் நேற்று மாலை அதே ஊரில் தெற்குத் தெருவில் உள்ள ஒரு டிபன் கடையில் இட்லி வாங்குவதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தார். செல்லும் வழியில் நின்றிருந்த மின்கம்பத்தின் ஸ்டே கம்பியை பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்து வந்த ஆலங்குளம் போலீசார், மின்னல்கொடியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.மேலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Alankulam ,Muthukutty ,Minnalkodi ,Kasinathapuram Melet Street ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு