×

காங்கயத்தில் தொடர் சாரல் மழையால் கொப்பரை உற்பத்தி தொழில் பாதிப்பு

 

காங்கயம், ஜன.9: காங்கயம் சுற்றுப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் கொப்பரை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் 800க்கும் மேற்பட்ட அளவில் உள்ளன. இப்பகுதியில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெறுகிறது. தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாக பாதிப்படும். இந்நிலையில் காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. மேலும் நேற்று காலை முதல் தொடர்ந்து அவ்வப்போது விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாலின் கொண்டு மூடி வைக்கப்பட்டது.

The post காங்கயத்தில் தொடர் சாரல் மழையால் கொப்பரை உற்பத்தி தொழில் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Gangayan ,Kangayam ,Gangaim ,Dinakaran ,
× RELATED வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்