×

தடையை மீறி மகாதீபமலை மீது ஏறிய வெளிநாடு, ஆந்திரா பக்தர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் அண்ணாமலை மீது ஏறவும், மலையையொட்டி உள்ள காப்புகாடு பகுதிக்கு செல்லவும் வனத்துறை தடை விதித்துள்ளது. மீறினால், அபராதத்துடன், சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டை சேர்ந்த ஒரு பக்தரும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பக்தர்களும் தடையை மீறி மலை மீது ஏறியுள்ளனர். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த வனத்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அனைவரையும் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் விளக்க கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

The post தடையை மீறி மகாதீபமலை மீது ஏறிய வெளிநாடு, ஆந்திரா பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Andhra ,Mahadeepamalai ,Tiruvannamalai ,Annamalai ,Mahadeepam ,
× RELATED ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில்...