×

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு விரைந்து வழங்க நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வன்னியர்கள் இட ஒடுக்கீடு குறித்து பரிந்துரை அளிப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு வரும் 11ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று ‘‘வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்’’ என்று பல்வேறு காலங்களில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இம்மாத இறுதியில் கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

The post வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு விரைந்து வழங்க நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vanniyyas ,Ramadoss ,CHENNAI ,Ramdas ,Vanniyars ,Tamil Nadu Commission for Backward Persons ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...