×

அமைச்சர்கள் விடுதலையை மறு ஆய்வு செய்யும் வழக்குகளில் பிப்ரவரி மாதம் இறுதி விசாரணை நடைபெறும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரை விடுவித்த உத்தரவுக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்குகள் பிப்ரவரி மாதம் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரை விடுவித்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

மூன்று மாத கால இடைவெளிக்கு பிறகு இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த 4 வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது சட்டபூர்வமானதா என்பதை ஆய்வு செய்ய தாமாக முன் வந்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 4 வழக்குகளிலும் பிப். 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை மற்ற வழக்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் தினந்தோறும் மாலை 3 மணிக்கு மேல் இறுதி விசாரணை நடத்தப்படும். வழக்கறிஞர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதே போல அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

The post அமைச்சர்கள் விடுதலையை மறு ஆய்வு செய்யும் வழக்குகளில் பிப்ரவரி மாதம் இறுதி விசாரணை நடைபெறும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,KKSSR Ramachandran ,Thangam Tennarasu ,chief minister ,Panneerselvam ,minister ,Varamathi ,ICourt ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும்...