- உலக முதலீட்டாளர்கள் மாநாடு
- இண்டஸ்ட்ரி 4.0 டெக்னாலஜ
- ஆர்க்கடம் அரசு தொழில் பயிற்சி மையம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதலமைச்சர்
- ஸ்ரீ.
- மு.கே ஸ்டாலின்
- தொழில்
- 4.0
- தொழில்நுட்ப மையம்
- அரசு தொழிற்பயிற்சி நிலையம்
- தின மலர்
சென்னை : உலக முதலீட்டாளர்கள் மாநாடு :பிரதிநிதிகளின் குழு ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தினை பார்வையிட்டனர். தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 07.01.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று (08.01.2024) உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த பிரதிநிதிகள் 25 பேர் கொண்ட குழு. தமிழக அரசால் M/s. டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட், நிறுவனத்துடன் இணைந்து ரூ.2877.43 கோடி செலவில் தொழில் 4.0 தரத்தில் அமைக்கப்பட்ட 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒன்றான ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில்நுட்ப மையத்தினை பார்வையிட்டனர்.
இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் 4.0 தரத்திலான இண்டஸ்ட்டிரியல் ரோபோட்டிக்ஸ், (Industrial Robotics) அட்வான்ஸ்டு சி.என்.சி. ஆப்பரேட்டர் (Advanced CNC Operator), மெக்கானிக் மின்சார வாகனங்கள் (Mechanic Electric Vehicles) மற்றும் மேனுஃபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் அண்டு ஆட்டோமேஷன் (Manufacturing Process Control and Automation) பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தொழில்நுட்ப மையத்தில் உள்ள இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் குறித்தும் அதில் வழங்கப்படும் பயிற்சிகளை குறித்தும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த், இ.ஆ.ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அவர்கள் குழுவினருக்கு எடுத்துரைத்தார்கள். இத்தொழில்நுட்ப மையத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு தொழிற்சாலைகளுக்கு இணையான தரத்தில் உள்ள இயந்திரங்கள். மென்பொருட்கள் மற்றும் வன்பொருட்கள் ஆகியவற்றில் பயிற்றுநர்கள் மற்றும் மாணவர்கள் பயிற்சி பெறுவதை கண்டு வருகைபுரிந்த குழுவினர் பாராட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், பிரதிநிதிகள் குழுவுடன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த், இ.ஆ.ப.. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர், திருமதி எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., அவர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உயர் அதிகாரிகள், வழிகாட்டி நிறுவன (Guldance) துறை அதிகாரிகள் மற்றும் SIPCOT அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post உலக முதலீட்டாளர்கள் மாநாடு :பிரதிநிதிகளின் குழு ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தினை பார்வையிட்டனர்!! appeared first on Dinakaran.