×

பட்டுக்கோட்டையில் கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் மர்மமாக உயிரிழப்பு: ஆணவக் கொலையா என போலீசார் விசாரணை

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் மர்மமாக முறையில் உயிரிழந்துள்ளர். இந்தஉயிரிழப்பு ஆணவக் கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா இருவரும் திருப்பூரில் ஒன்றாக பணியாற்றிய நிலையில், காதலித்து கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்

திருமணம் செய்தது பெற்றோருக்கு தெரியவந்து ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வந்த நிலையில், கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யா இறந்துள்ளார். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சடலத்தை எரித்துள்ளனர். இந்த விஷயம் தற்போது தெரியவர கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பட்டுக்கோட்டையில் கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் மர்மமாக உயிரிழப்பு: ஆணவக் கொலையா என போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pattukottai ,Navin ,Aishwarya ,Poovalur ,Thanjavur district ,
× RELATED விஸ்வநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு