×

ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் தாமிரபரணி கரையோர மக்கள் எச்சரிக்கை!

நெல்லை: ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தாமிரபரணி ஆற்றில் யாரும் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அரசால் அவ்வப்போது வழங்கப்படும் எச்சரிக்கைகளை மக்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். நெல்லையில் வரும் 9, 10-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

The post ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் தாமிரபரணி கரையோர மக்கள் எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Tamiraparani ,Nellai ,Paddy Collector ,Karthikeyan ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...