×

ஊஞ்சவேலாம்பட்டி பிரிவில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டி பிரிவு பகுதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். பொள்ளாச்சி அருகே உடுமலை ரோடு, தாராபுரம் ரோடு சந்திப்பில் உள்ள ஊஞ்சவேலாம்பட்டி கிராமத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த வழியானது, தாராபுரம், பெதப்பம்பட்டி, பூசாரிப்பட்டி, பழனி, திண்டுக்கல் மற்றும் தென்மாவட்ட பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. ஊஞ்சவேலாம்பட்டி பிரிவு வழியாக செல்லும் பஸ் நிறுத்தம் இடத்தில், பயணிகள் வசதிக்காக சுமார் பல ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில ஆண்டுகளிலேயே சாலை விரிவாக்க பணிக்காக அந்த நிழற்குடை அகற்றப்பட்டது. தற்போது ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு முழுமையாக பணி நிறைவடைந்த நிலையில், அங்கு இதுவரை நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் திறந்த வெளியிலே நின்று பஸ் ஏறி செல்கின்றனர். மழை காலங்களில் மக்கள் ஒதுங்கக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே ஊஞ்சவேலாம்பட்டி பிரிவில் புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊஞ்சவேலாம்பட்டி பிரிவில் நிழற்குடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Oonjavelambatti ,Pollachi ,Oonjavelampatti ,Udumalai Road ,Tarapuram Road ,Tarapuram ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி அருகே விஏஓ தற்கொலை: 2 பேர் மீது வழக்கு