×

சூனாம்பேடு அருகே சேதமடைந்த அங்கன்வாடி மையம்: புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

 

செய்யூர், ஜன.8: சூனாம்பேடு பகுதியில் உள்ள சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சூனாம்பேடு ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையம் அருகே அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இந்த அங்கன்வாடி மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் கடந்த 15 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது.

இந்நிலையில், முறையான பராமரிப்பு, மறுப்புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு, சேதமடைந்துள்ளது. இந்த கட்டிடம் எப்போது சரிந்து விழும் என்ற அச்சத்தில் இங்கு பயிலும் குழந்தைகளை அங்குள்ள பெருமாள் கோயில் தெரு பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்கு மாற்றப்பட்டு, மாதம்தோறும் வாடகை வழங்கி வருகின்றனர்.

பழுதான கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அதே பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சூனாம்பேடு அருகே சேதமடைந்த அங்கன்வாடி மையம்: புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Center ,Soonambedu ,Seyyur ,Anganwadi center ,Choonambedu Panchayat, Chengalpattu district ,Choonambedu ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை