×

மரத்தில் வேன் மோதி 11 பக்தர்கள் படுகாயம்: குடியாத்தத்தை சேர்ந்தவர்கள் செய்யாறில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து

செய்யாறு, ஜன.8: செய்யாறில் மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் மேல்மருவத்தூர் சென்ற பெண்கள் உ்ட்பட 11 பக்தர்கள் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையை சேர்ந்தவர் சுமதி(40). மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் பக்தையான இவர் கோயிலுக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருந்தார். மேலும், இவரது உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பலர் மாலை அணிந்து விரதம் இருந்தனர். இவர்கள் 25 பேர் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் குடியாத்தத்தில் இருந்து மேல்மருவத்தூருக்கு வேனில் புறப்பட்டனர். வேனை அதேபகுதியை சேர்ந்த டிரைவர் பல்குணன்(35) என்பவர் ஓட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வழியாக சென்றனர். ஆற்காடு சாலையில் நேற்று காலை சுமார் 6 மணி அளவில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியை கடந்து செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர புளியமரத்தின் மீது மோதி முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் டிரைவர் பல்குணன் மற்றும் வேனில் பயணம் செய்த சுமதி(40), சித்ரா(43), ஆஷா(42), தாமோதரன்(42), சத்யா(41), நந்தகுமார்(34), மூர்த்தி(45), தியாகு(27), தினேஷ்(23), தருண்(8) ஆகிய 11 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மரத்தில் வேன் மோதி 11 பக்தர்கள் படுகாயம்: குடியாத்தத்தை சேர்ந்தவர்கள் செய்யாறில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Seyyar ,Melmaruvathur ,Sumathi ,Bhubaneswari Petty ,Kudiatham, Vellore District ,Adiparasakthi Amman ,Van ,Dinakaran ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...