- உலக முதலீட்டாளர்கள் மாநாடு
- கிருஷ்ணகிரி
- சென்னை
- உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
கிருஷ்ணகிரி, ஜன.8: சென்னையில் துவங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்ச்சிகள், காணொலி காட்சி வாயிகலாக கிருஷ்ணகிரியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாடு நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம், அரசு ஆடவர் கலைக்கல்லூரி, ஓசூர் சிப்காட், போச்சம்பள்ளி சிப்காட் ஆகிய இடங்களில் இந்த நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சரயு, பர்கூர் மதியழகன் எம்எல்ஏ, மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன் மற்றும் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல், ஓசூர் சிப்காட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா மற்றும் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேரடி ஒளிபரப்பு appeared first on Dinakaran.