புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பணமோசடி தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சஞ்சய் சிங், என்.டி.குப்தா மற்றும் சுஷில் குமார் குப்தா ஆகியோரின் பதவிக்காலங்கள் இம்மாதம் 27ம் தேதியுடன் முடிவடைவதால் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் இருவரும் ஆம்ஆத்மி கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதையடுத்து சிறையில் உள்ள சஞ்சய் சிங் வேட்பு மனுக்களில் நேரில் மனு தாக்கல் செய்ய அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால், “வேட்பு மனுக்களில் கையெழுத்திட சஞ்சய் சிங்கை சிறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். அவரை இன்றும், நாளை மறுநாளும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன் சிறை அதிகாரிகள் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டார்.
The post எம்.பி தேர்தலில் மீண்டும் போட்டி சஞ்சய் சிங் நேரில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.