×

பெட்ரோல் பங்க் ஊழியருக்கு சரமாரி கத்தி வெட்டு: 6 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் பகுதியில் தனியார்  பெட்ரோல் பங்க் இயங்குகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பைக்குகளில் 6 பேர், பெட்ரோல் பங்க் வந்தனர். அங்கிருந்த ஊழியர் சோமன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் பெட்ரோல் போடும்படி கூறினர். அதற்கு, பெட்ரோல் ஸ்டாக் இல்லை என அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து,  மணிகண்டனின் தலையில் சரமாரியாக வெட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர் ஓடிவந்தனர். உடனே 4 பேர், 2 பைக்கில் தப்பினர். 2 பேர், ஒரு பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தலைமறைவாயினர்.தகவலறிந்து பாலுச்செட்டிச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெட்ரோல் பங்க்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், வேகவதி பாலம் அருகே சந்தேகப்படும்படி இருந்த 4 பேரை, நேற்று காலை போலீசார் பிடித்தனர்.  விசாரணையில், சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெகன்ராஜ்(20), பூந்தமல்லி அடுத்த கரையாஞ்சாவடி இமானுவேல் (18), பிரவின் (18),  குமணன்சாவடி மதியழகன் (18). பெட்ரோல் பங்க் ஊழியர் மணிகண்டனை வெட்டியது தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி, அவர்களது கூட்டாளிகள் செங்குன்றம் சதிஷ் (23), கரையான்சாவடி பாலாஜிராஜா(19) ஆகியோரை கீழம்பி பகுதியில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பைக், பட்டா கத்தி ஆகியவை பறிமுதல் செய்தனர். …

The post பெட்ரோல் பங்க் ஊழியருக்கு சரமாரி கத்தி வெட்டு: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kilikadirpur ,Gasoline station ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...