×

பெண்ணை தரக்குறைவாக பேசிய டிரைவர் சஸ்பெண்ட்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து அய்யன்கொல்லி பகுதிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் பெண் பயணி ஒருவர் கையில் குழந்தையுடன் பஸ்சை நிறுத்துமாறு கை காட்டியுள்ளார். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றார். தொடர்ந்து பின்னால் வந்த பஸ்சில் சென்ற அந்த பெண் அய்யன்கொல்லியில் பஸ் நின்றபோது கைகாட்டியும் நிறுத்தாமல் வந்தது குறித்து டிரைவரிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது டிரைவர் முறையாக பதில் அளிக்காமல் அந்த பெண்ணிடம், ‘‘என்ன இது உங்க அப்பன் வீட்டு பஸ்சா?’’ என கேட்டு தரக்குறைவாக பேசினார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், பஸ் டிரைவர் பன்னீர்செல்வம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

The post பெண்ணை தரக்குறைவாக பேசிய டிரைவர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ayyankolli ,Kudalur ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்