×

போலீஸ்காரரின் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (35). இவர் வேலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரும் செஞ்சியைச் சேர்ந்த பவித்ரா (32) என்பவரும் காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கணவன், மனைவி இடையே நேற்று முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பவித்ரா, நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அதிகாலை 5 மணியளவில் வேலூர் கஸ்பா ரயில்வே மேம்பாலம் அருகே கண்டோன்மெண்ட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

The post போலீஸ்காரரின் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Rajasekhar ,Panamadangi ,Gadpadi ,Vellore district ,Vellore Armed Forces ,Pavitra ,Senchi ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...