×

தமிழ்நாடு முழுவதும் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம்: காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்களும் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட மொத்தம் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த தமிழ்சந்திரனுக்கு அதே பதவியில் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு-1 எஸ்பியாக இருந்த ஜெயரூ.க்கு பதவி உயர்வு வழங்கி செயலாக்கப்பிரிவு ஐஜியாகவும், சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகம் தலைமையிட டிஐஜியாக இருந்த சாமுண்டீஸ்வரி சென்னை,சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாகவும், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாக இருந்த லட்சுமிக்கு பதவி உயர்வு வழங்கி ஆயுதப்படை தலைமையிட ஐஜியாகவும், சேலம் சரக டிஐஜியாக இருந்த ராஜேஸ்வரிக்கு, ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு சீருடைப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினராகவும், சென்னை சிஐடி உளவுத்துறை டிஐஜியாக இருந்த ராஜேந்திரன் ஆவடி மாநகர தலைமையிடம் மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும், வேலூர் சரக டிஐஜியாக இருந்த எம்.எஸ்.முத்துசாமிக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி வண்டலூர், ஊனமஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் இயக்குநராகவும், சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த மயில்வாகனன் சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாகவும், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய உதவி ஐஜியாக இருந்த வெண்மதி சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜியாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த சரோஜ்குமார் தாக்கூர், வேலூர் சரக டிஐஜியாகவும், சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த மகேஷ்குமார் சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து இணை கமிஷனராகவும், சென்னை சைபர் கிரைம் எஸ்பியாக இருந்த தேவராணி சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து இணை கமிஷனராகவும், காவல்துறை இயக்குநர் அலுவலகம் தலைமையிட உதவி ஐஜியாக இருந்த உமா, சேலம் சரக டிஐஜியாகவும், சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக இருந்த திருநாவுக்கரசு, சென்னை பாதுகாப்பு நுண்ணறிவுப்பிரிவு டிஐஜியாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி 7வது பட்டாலியன் கமாண்டன்டாக இருந்த ஜெயந்தி, சென்னை கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜியாகவும், ஆவடி 5வது பட்டாலியன் கமண்டன்டாக இருந்த ராமர் சென்னை ரயில்வே டிஐஜியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பணியிடமாற்றம்: காவல்துறை அமலாக்கப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, சென்னை குற்றப்பிரிவு ஐஜியாகவும், சென்னை ஆயுதப்படை ஐஜியாக இருந்த ஜெயகவுரி சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி ஐஜியாகவும், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா இயக்குநர் அலுவலகம் காவல்துறை விரிவாக்கம் பிரிவு ஐஜியாகவும், திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக இருந்த மகேஸ்வரி தாம்பரம் மாநகர தலைமையிட மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும், ஆவடி மாநகர சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக இருந்த விஜயகுமார் சென்னை மாநகர மேற்கு மண்டல இணை கமிஷனராகவும், தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக இருந்த திஷா மிட்டல் விழுப்புரம் சரக டிஐஜியாகவும், விழுப்புரம் சரக டிஐஜியாக இருந்த ஜியாவுல் ஹக், தஞ்சை சரக டிஐஜியாகவும், தஞ்சை சரக டிஐஜியாக இருந்த ஜெயச்சந்திரன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குநராகவும், சென்னை மாநகர மேற்கு மண்டல இணை கமிஷனராக இருந்த மனோகர் திருச்சி சரக டிஐஜியாகவும், திருச்சி சரக டிஐஜியாக இருந்த பகலவன் சென்னை சிஐடி நுண்ணறிவுப்பிரிவு டிஐஜியாகவும், தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக இருந்த மூர்த்தி திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் பதவி டிஐஜியாக தரம் குறைத்து கமிஷனராக அமர்த்தப்பட்டுள்ளார்.

அதேபோல், சென்னை காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக இருந்த மல்லிகா, காவல்துறை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவுக்கும், சென்னை பாதுகாப்பு நுண்ணறிவுப்பிரிவு டிஐஜியாக இருந்த மகேஷ் சென்னை உள்நாட்டு பாதுகாப்பு நுண்ணறிவுப்பிரிவு டிஐஜியாகவும், சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாக இருந்த கீதா திருநெல்வேலி நகர மேற்கு துணை கமிஷனராகவும், திருநெல்வேலி நகர மேற்கு துணை கமிஷனராக இருந்த சரவணகுமார் கோவை நகர தெற்கு துணை கமிஷனராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

8 எஸ்பிக்கள் மாற்றம்: கோவை நகர தெற்கு துணை கமிஷனராக இருந்த சண்முகம் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாகவும், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக இருந்த சுதாகர் சென்னை மாநகர பரங்கிமலை துணை கமிஷனராகவும், சென்னை மாநகர பரங்கிமலை துணை கமிஷனராக இருந்த தீபக் சிவாச் விழுப்புரம் மாவட்ட எஸ்பியாகவும், விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக இருந்த சஷாங்க் சாய் சென்னை கியூ பிரிவு சிஐடி எஸ்பியாகவும், சென்னை கியூ பிரிவு எஸ்பியாக இருந்த சசிமோகன் கோவை புதிதாக உருவாக்கப்பட்ட பங்கரவாத எதிர்ப்புப்படை எஸ்பியாகவும், வண்டலூர் ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாடமி நிர்வாக பிரிவு துணை இயக்குநராக இருந்த செல்வராஜ் அரியலூர் மாவட்ட எஸ்பியாகவும், அரியலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா விருதுநகர் மாவட்ட எஸ்பியாகவும், கோவை நகர வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த சந்தீஷ் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாகவும், ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக இருந்த தங்கதுரை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியாகவும், மதுரை மாவட்ட எஸ்பியாக இருந்த சிவபிரசாத் தேனி மாவட்ட எஸ்பியாகவும், தேனி மாவட்ட எஸ்பியாக இருந்த டொங்கரே பிரவின் உமேஷ் மதுரை மாவட்ட எஸ்பியாகவும், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பியாக இருந்த சிங்ஷ்லிங் சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாகவும், திருநெல்வேலி நகர தலைமையிட துணை கமிஷனராக இருந்த அனிதா மதுரை நகர வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், மதுரை நகர வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த புக்யா சினேக பிரியா சென்னை புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு படை எஸ்பியாகவும், சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக இருந்த மெகலினா ஐடன் சென்னை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் எஸ்பியாகவும், சென்னை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் எஸ்பியாக இருந்த பாண்டி கங்காதர் சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும், காவல்துறை இயக்குநர் அலுவலகம் காவலர் நலன் எஸ்பியாக இருந்த ராமகிருஷ்ணன் சென்னை மண்டல சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம்: காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்களும் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kanchipuram ,Villupuram ,Chennai ,Home Secretary ,Amutha ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...