×

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம் மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த திருமதி. சரிதா பிரசாந்த் என்பவர் கடந்த 29.12.2023ம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் (அஞ்சல்), எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி சிவ்சங்கர் என்பவர் கடந்த 06.01.2024 அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விலை மதிப்பில்லாத இந்த இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா ரூ. 10 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Shri Narendra Modi ,Nilgiri district ,K. Stalin ,Elamanna Village Mango Range Postal Area ,Sarita Prashant ,Nancy Sivsangar ,Mango Range ,Residence ,Jharkhand State ,Chief Minister MLA ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...