×

இந்தியாவில் வேலை செய்யக்கூடிய பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்; : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

தமிழகத்திற்கு உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது . இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர் . 2 நாட்கள் மாநாட்டில் 26 அமர்வுகளில் 170-க்கும் மேற்பட்ட உலக புகழ் வாய்ந்த பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உரையில் , தொழில் துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது . நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மின்வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல பிரிவுகளில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார இரு சக்கர வாகனங்களில் 70% தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகின்றன.

ஏற்றுமதிக்கான குறியீட்டு எண்ணில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் வேலை செய்யக்கூடிய பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்; நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் சீராக வளர வேண்டும் என்பதே முதல்வரின் இலக்கு.என இவ்வாறு உரையாற்றினார்.

The post இந்தியாவில் வேலை செய்யக்கூடிய பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்; : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu ,Minister ,D. R. B King ,World Investors Conference ,Chennai Trade Centre ,Nandampakkam ,Singapore ,Korea ,UK ,Japan ,France ,D. R. P Raja ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...