×

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இன்று முதல் நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன் விநியோகிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்கள், ரூ.1000 ரொக்கம் பெறலாம்.

1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்புடன் ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.239 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ஒன்றிய, மாநில அரசு ஊழியா்கள், வருமான வரி செலுத்துவோா், எந்தப் பொருளும் பெறாத குடும்ப அட்டை வைத்திருப்போா், சா்க்கரை அட்டைதாரா்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரூ. 1,000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rayson ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...