×

உத்தமபாளையம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கம்பம், ஜன. 7: உத்தமபாளையம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.உத்தமபாளையம் தாலுகாவில் சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரேஷன் கார்டுகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இத்தாலுகாவில் இருந்து மட்டும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கக்கோரி சுமார் 1600 பேர் கடந்த எட்டு மாதத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் அரசு தரப்பில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்காக புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது கடந்த மே மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் புதிதாக திருமணம் முடித்தவர்கள் மற்றும் அரசு பணி காரணமாக இடமாறுதல் பெற்றவர்கள் புதிய மற்றும் முகவரி மாற்றம் செய்த ரேஷன் கார்டுகள் கேட்டுள்ள விண்ணப்பதாரர்கள் கடந்த எட்டு மாதமாக தவித்து வருகின்றனர். எனவே விண்ணப்பித்த அனைவருக்கும் உரிய விசாரணை நடத்தி புதிய ரேஷன் கார்டுகளை விரைவாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

The post உத்தமபாளையம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uttamapalayam taluk ,Kampham ,Utthampalayam taluk ,Italuka ,Uttamapalayam taluka ,Dinakaran ,
× RELATED இடுக்கி மாவட்டத்தில் அதிகரிக்கும்...