×

மாவட்ட கலெக்டர் தகவல் பிளாஸ்டிக் இல்லாத பள்ளி, கல்லூரி வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது

திருவள்ளூர், ஜன. 7: மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 2023 – 24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு ‘மஞ்சப்பை விருதுகள்’ வழங்கப்படும் என அறிவித்தார். இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள், மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும்.

இவ்விருது பெறுவோர்களுக்கு முதல் பரிசாக ₹10 லட்சமும், இரண்டாம் பரிசாக ₹5 லட்சமும், மூன்றாம் பரிசாக ₹3 லட்சமும் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்களுக்கு ‘மஞ்சப்பை விருதுகள்’ வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்களை https://tiruvallur.nic.in என்ற திருவள்ளூர் மாவட்ட இணையதளத்திலிருந்தும், https://tnpcb.gov.in என்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவன தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டு இருக்க வேண்டும். கையொப்பமிடப்பட்ட பிரதிகள் 2 மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட கலெக்டர் தகவல் பிளாஸ்டிக் இல்லாத பள்ளி, கல்லூரி வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது appeared first on Dinakaran.

Tags : Manjapai Award ,Free School ,Tiruvallur ,Manjapai ,Minister ,Environment and Climate Change ,Legislative Assembly ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...