×

ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை, ஜன.7: தேன்கனிக்கோட்டை அருகே, கம்மந்தூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 6 யானைகள் நேற்று முன்தினம் இரவு மாரச்சந்திரம் கிராமத்திற்குள் புகுந்தன. பின்னர், கோவிந்தராஜ் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்து கோஸ், மக்காச்சோளத்தை துவம்சம் செய்தன. மேலும், வெங்கடேஷ் என்பவரின் தோட்டத்திற்குள் நுழைந்து தக்காளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. பொழுது புலர்ந்ததும் மீண்டும் காட்டிற்குள் ஓட்டம் பிடித்தன. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள், யானைகளால் பயிர் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு கண்ணீர் வடித்தனர். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா மாநிலத்திற்கு யானைகளை விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Kammandur forest ,Marachandram ,Gos ,Govindaraj ,Balaji ,Venkatesh ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு