×

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக அனுப்ப அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக அனுப்ப அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் விபரங்களை அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மேலாளர் மூலமாக முகாம் அமைத்து சான்றிதழ் சரிபார்தது பட்டியல் தயாரித்து உடனடியாக வழங்கிட கோரியுள்ளது.

மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்களை மாவட்ட வாரியாக உடன் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன் தொடர்பாக அரசுக்கு விவர அறிக்கை அனுப்ப வேண்டியுள்ளதால், தனிக் கவனம் செலுத்தி சரியான விவரங்களை அனுப்பிவைக்குமாறு அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்களின் விவரங்களை அறிக்கையாக அனுப்ப அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED மது பாட்டில்களை திரும்ப பெறும்...