×

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் வீட்டின் முன்புற ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்த 2 கார், டிராக்டர், 7 பைக் எரிந்ததால் பரபரப்பு: மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் வீட்டின் முன்புற ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்த 2 கார், டிராக்டர், 7 பைக் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின் கசிவினால் தீப்பிடித்ததா அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தார்களா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் எம்ஜிஆர் நகர், மருத்துவமனை ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி ஷர்மிளா (32). வழக்கறிஞர். இவருக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் திருமணம் நடந்தது. வெங்கடேசன், காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். அதனால் பேரம்பாக்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் ஷர்மிளா வசித்து வருகிறார். இவரது தந்தை சாமிக்கண்ணு (60). ஆட்டோ எலக்ட்ரீசியன். வீட்டின் முன்பகுதியில் மெட்டல் ஷீட்டிலான ஷெட் அமைத்து மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் ஷர்மிளாவுக்கு சொந்தமான கார், பைக் மற்றும் இவரது அண்ணன் வெங்கடேசனின் வாகனங்கள் மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த 4 எலக்ட்ரிக் பைக், ஒரு டிராக்டர் ஆகியவற்றை ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்தனர். நேற்று ஷெட்டில் இருந்து திடீரென சத்தம் வந்தது. உடனே ஷர்மிளா விரைந்து வந்து பார்த்தார். அனைத்து வாகனங்களும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்தார். தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் 2 கார்கள், 1 டிராக்டர், 7 பைக் முழுவதுமாக எரிந்து சேதமானது.

இதுகுறித்து மப்பேடு போலீசில் ஷர்மிளா புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்கள் தீ வைத்தார்களா அல்லது மின் கசிவினால் தீப்பிடித்து எரிந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் வீட்டின் முன்புற ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்த 2 கார், டிராக்டர், 7 பைக் எரிந்ததால் பரபரப்பு: மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Parambakam ,Dinakaran ,
× RELATED மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது