×

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு 21-ம் தேதி சேலத்தில் நடைபெறும்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு 21-ம் தேதி சேலத்தில் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு டிச.15-ம் தேதி கட்சி வரலாற்றில் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு முத்திரை பதித்து திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 2023ம் ஆண்டு டிச.17-ம் தேதி (ஞாயிறு) திமுக இளைஞரணியின் 2-து மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும்’’ என்று கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு 2024ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

இதையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாடு குறித்த மோட்டார் சைக்கிள் பேரணியை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். அந்த பேரணி 234 தொகுதிகளுக்கும் சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தது.

மாநாட்டு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றும் வரும் நிலையில் பந்தலுக்காக பில்லர்கள் நடப்பட்டு விரைவில் தகர கூரைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. பிரமாண்ட முகப்பு தோற்றத்துடன் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பந்தல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

The post திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு 21-ம் தேதி சேலத்தில் நடைபெறும்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 2nd State Conference of DMK Youth ,Salem ,DMK Central Committee Announcement ,Chennai ,DMK ,2nd state convention of DMK Youth ,first convention ,DMK Youth ,DMK Central League Announcement ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...