×

பாரதப்புழா ஆற்றின் கரையோரம் நாணலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அருகே பாரதப்புழா ஆற்றின் கரையோரம் மர்மநபர்கள் நாணலுக்கு தீவைத்து சேதப்படுத்தினர். ஒத்தப்பாலத்தை அடுத்த மாயணூர் பாலம் அருகே பாரதப்புழா ஆற்றில் படர்ந்து விரிந்து கிடக்கின்ற நாணலுக்கு சமூக விரோதிகள் தீ வைத்து சேதப்படுத்தினர். இதனால் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த நாணல் புற்கள் படர்ந்து பற்றி எரிந்து சாம்பலாயின.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பட்டாம்பி,வடக்கஞ்சேரி, பாலக்காடு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து படர்ந்து எரிந்த நாணல்களை தண்ணீர் விட்டு அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் பறவைகள், அவை முட்டையிட்டு அடைக்காத்த குஞ்சுகள் மற்றும் வெளிநாட்டு பறவைகள், நாரையினங்கள் ஆகியவை தீயில் கருகி இறந்துள்ளன என பறவைகள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இதுபோன்று மர்மநபர்கள் ஆற்றின் கரையோரம் வளர்ந்துள்ள புற்களுக்கு தீ வைப்பது தொடர்ந்துள்ளது. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆற்றில் நாணல் சேகரிக்கரித்து பாய் நெய்கின்ற குடும்பத்தினரும் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

ஆற்றில் வளர்கின்ற நாணலை நம்பியே வாழ்க்கை நடத்தும் சில குடும்பத்தினர் இப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். தீயிட்டு ஆற்றின் இயற்கை அழகை,எழிலை, செழிப்பை சேதப்படுத்துபவர்களை கண்டுப்பிடித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரதப்புழா ஆற்றில் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் சமூகவிரோதிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்த சம்பவங்கள் அடிகடி நடைபெறுவதால் காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாரதப்புழா ஆற்றின் கரையோரம் நாணலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Tags : Bharatapuzha river ,Palakkad ,Othadapalam ,Mayanur bridge ,Othappalam ,Dinakaran ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது