×

கோயிலுக்கு அழைத்துச்சென்று வாயில் விஷம் ஊற்றி 2 குழந்தைகளை கொன்ற தந்தை 32 நாளுக்குப்பின் கைது

*சிகிச்சை பெற்று திரும்பியதும் போலீசார் நடவடிக்கை

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 32 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு அவரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாகரசம்பட்டி என்.தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் கடலரசு(32). இவருக்கும், தர்மபுரி இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜனனி என்பவருக்கும், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு திவான் ராஜ் என்ற மகனும், நிவந்திகா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில், ஜனனி-கடலரசு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறில், ஜனனி கோபித்துக்கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து, உறவினர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி ஜனனியை அழைத்து வந்து கடலரசு குடும்பம் நடத்தி வந்தார். இதனிடையே கடந்த மாதம் திருமண நாளையொட்டி, பெரிய மலை தீர்த்தம் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றனர்.

அப்போது, திடீரென கடலரசு மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து, மனைவி ஜனனி வாயில் ஊற்றினார். அவர், தட்டி விட்டு அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து அருகில் இருந்த 2 குழந்தைகள் வாயிலும் கடலரசு விஷத்தை ஊற்றிவிட்டு, அவரும் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கடலரசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், அவர் குணமடைந்தார். இதனிடையே அவர் மீது நாகரசம்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், 32 நாட்களுக்கு பின்பு நேற்று முன்தினம் கடலரசுவை கைது செய்தனர்.

The post கோயிலுக்கு அழைத்துச்சென்று வாயில் விஷம் ஊற்றி 2 குழந்தைகளை கொன்ற தந்தை 32 நாளுக்குப்பின் கைது appeared first on Dinakaran.

Tags : Bochampalli ,Nagarasambatti ,Bochampalli, Krishnagiri district ,Dinakaran ,
× RELATED முட்டை விற்பனை ஜோர்