×

உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்

மாமல்லபுரம், ஜன.6: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதி அருகே கடற்கரையில் 4 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட டால்பின் குட்டி ஒன்று உயிருடன் கரை ஒதுங்கி இருப்பதாக நேற்று மாலை மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்பு துறை சிறப்பு நிலை அலுவலர் ரமேஷ் பாபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று உயிருடன் கரை ஒதுங்கி இருந்த டால்பினை பத்திரமாக மீட்டு, மீண்டும் கடலில் விட்டனர். அப்போது, டால்பின் குட்டி துள்ளி குதித்து கடலில் நீந்தி சென்றது.

The post உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Tamil Nadu Tourism Development Corporation ,ECR Road ,
× RELATED புராதன சின்னங்களை விளக்கும் வகையில் ₹5...