- தேனி கலெக்டர்
- பிறகு நான்
- தேனி கலெக்டேர்
- தேனி கலெக்டர் அலுவலகம்
- மதுரை சாலை
- தேனி நகர்
- தேனி கலெக்டர்ஸ்
- தின மலர்
தேனி, ஜன. 6: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில், அலுவலர்கள் வந்து செல்லும் அரசு பேருந்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. தேனி கலெக்டர் அலுவலகம் தேனி நகரில் உள்ள மதுரை சாலையில் அமைந்துள்ளது. இவ்வலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம், மாவட்ட கருவூலம், மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவ்வலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்காக நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகளில் அலுவலக ஊழியர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பேருந்து நுழைவாயில் வழியாக கலெக்டர் அலுவலக போர்டிகோ வரை வரும் வழியில் இருபுறமும் மரங்கள் வளர்ந்து கிளைகள் சாலையில் குறுக்கிட்ட நிலையில் இருந்தன.
இதனால் பேருந்தின் கண்ணாடி மீதும், பக்கவாட்டு ஜன்னல்களுக்குள்ளும் மரக்கிளைகள் புகுந்து இடையூறு ஏற்படுத்தி வந்தது. மேலும் கலெக்டர் அலுவலகம் வந்து செல்லும் பொதுமக்களும் இந்த மரக்கிளைகளால் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து இந்த மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முதல் இருபுறமும் இருந்த மரங்களின் கிளைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி நேற்று பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.
The post தேனி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறான மரக்கிளைகள் வெட்டி அகற்றம் appeared first on Dinakaran.