×

அஞ்சலகங்களில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு

 

சிவகங்கை, ஜன.6: சிவகங்கை மற்றும் மானாமதுரை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் சேவைக்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பொதுமக்களின் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களுக்கான தேவைகளை கருத்தில் கொண்டு சிவகங்கை கோட்டத்தில் உள்ள சிவகங்கை மற்றும் மானாமதுரை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு, திருத்த சேவைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இச்சேவைகள் நடைபெறும் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பயன் பெறுவர். இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post அஞ்சலகங்களில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Aadhaar ,Manamadurai ,Superintendent ,Sivagangai Post Office Division ,Mariappan ,Sivagangai Division ,Dinakaran ,
× RELATED மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய...