×

வேளாண் அதிகாரி சஸ்பெண்ட்

பெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனராக கோவிந்தராஜன் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கடந்த மாதம் 23ம் தேதி வல்லம் பகுதியை சேர்ந்த விவசாயி உளுந்து விதை வாங்கியதற்கு ரசீது கேட்டு கொண்டிருந்தார். இதனால் அந்த விவசாயிடம் அவர் அவதூறாக பேசி உள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலானது. இதனையடுத்து கோவிந்தராஜனை சஸ்பெண்ட் செய்து சென்னை வேளாண்மை ஆணையர் சுப்பிரமணியன் நேற்று உத்தரவிட்டார்.

The post வேளாண் அதிகாரி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Peranamallur ,Govindarajan ,Peranamallur Agricultural Extension Center ,Tiruvannamalai District ,Vallam ,Dinakaran ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...