×

9, 10ம் வகுப்பு மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்புகல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுள்ள அனைத்து மாணவிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.4000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற 9 மற்றும் 10ம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை பெற்றோர் ஆண்டு வருமானச்சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவிகளது விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாணவியர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 9, 10ம் வகுப்பு மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Collector Information ,Chennai ,District ,Collector ,Rashmi Siddharth Jagade ,Union Government ,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...