×

சூரியன் எப்.எம் சார்பில் ள்ளி மாணவர்களுக்கான மெகா ஓவியப் போட்டி: சூரப்பட்டில் நாளை நடக்கிறது

சென்னை: சூரியன் எப்.எம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மெகா ஓவியப் போட்டி நாளை நடக்கிறது. பள்ளி மாணவர்களின் திறமையை வெளிகொண்டுவரும் நோக்கில், சூரியன் எப்.எம் தொடர்ந்து பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கென மெகா ஓவியப் போட்டியை நாளை சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் நடத்துகிறது.இந்த போட்டியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். போட்டிக்கு நுழைவு கட்டணம் இலவசம். காலை 9.30 மணிக்கு உள்ளே அனுமதி அளிக்கப்படும்.

போட்டியில் 1ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு கார்ட்டூன்கள் தலைப்பிலும், 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மரங்களை காப்போம் என்ற தலைப்பிலும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு எனது விடுமுறை காலம் என்ற தலைப்பிலும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆழ்கடல் அதிசயம் என்ற தலைப்பிலும் போட்டி நடத்தப்படும். இப்போட்டி வர்ணஜாலம் என்ற தலைப்பில் நடத்தப்படுகிறது. ணவர்கள் 8678 935 935 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்து வர்ணஜாலம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளலாம்.

போட்டியின் விதிமுறைகள்:
* சார்ட் பேப்பர் சூரியன் எப்.எம் சார்பில் வழங்கப்படும். போட்டியில் பங்குபெறுபவர்கள் ஓவியம் வரைய தேவையான பென்சில், ஸ்கெட்ச் போன்றவற்றை எடுத்து வர வேண்டும்

* போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்கி 11.30 மணிக்கு முடிவடையும்.

* தனித்துவமான ஓவியத்திற்கு சிறந்த பரிசு வழங்கப்படும்

* மாணவர்கள் தங்களது பள்ளி அடையாள அட்டை மற்றும் பெற்றோர்களின் செல்போன் எண்ணை வைத்திருக்க வேண்டும்

* 8ம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்களுடன் ஆசிரியர் அல்லது பெற்றோர் வரவேண்டும்

* போட்டியின் போது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை

* மாணவர்கள் தண்ணீர் பாட்டில் கொண்டு வர வேண்டும்

* போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்

* ஒவ்வொரு பிரிவுக்கும் 3 பரிசுகள், 2 சிறப்பு பரிசுகள் மற்றும் 20 ஆறுதல் பரிசுகள்

* முதலில் வருபவர்களுக்கு முதல் சேவை அடிப்படையில் இடமளிக்கப்படும், நிர்வாகத்தின் முடிவே இறுதியானது. போட்டியில் பங்குபெறும் மாணவர்களுக்கு தினகரன் நாளிதழ் சார்பாக வாழ்த்துகள்.

The post சூரியன் எப்.எம் சார்பில் ள்ளி மாணவர்களுக்கான மெகா ஓவியப் போட்டி: சூரப்பட்டில் நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Mega painting competition ,Lilli ,Surya FM ,Suryapat ,Chennai ,Suryan FM ,Mega painting competition for ,Surapat ,
× RELATED 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு...