×

சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு வங்கிக் கடன் பெற முகாம்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: ன்னை மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டம், பிரதம மந்திரியின் உணவுபதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளையோரும், பொதுமக்களும், புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, விலைப் பட்டியல், திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் மண்டல இணை இயக்குநர் அலுவலர்கள் மூலமாக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். டன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு கடன் பெற்று தொழில் நிறுவனம் தொடங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 27ம் தேதி வரை சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பங்கேற்று, தொழில் முனைவோர்கள் பயன்பெறலாம்.

The post சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு வங்கிக் கடன் பெற முகாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rashmi Siddharth Jagade ,Nnai district ,
× RELATED கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய...