×

செய்யாறு அருகே கோயிலுக்கு சென்ற சுற்றுலா பஸ் மரத்தில் மோதி விபத்து பெண்கள் உள்பட 37 பக்தர்கள் படுகாயம்

செய்யாறு: செய்யாறு அருகே மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பக்தர்களின் சுற்றுலா பஸ் மரத்தில் மோதியதில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 37 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா கீழ்பட்டி மற்றும் அகரம்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 55 பக்தர்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் பக்தர்கள் அனைவரும் தனியார் சுற்றுலா பஸ்சில் அகரம்சேரியில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு புறப்பட்டனர். பஸ்சை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் திவாகர்(38) என்பவர் ஓட்டினார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு-வந்தவாசி சாலை திரும்பூண்டி கிராமம் அருகே பஸ் சென்றது. அங்குள்ள வளைவில் திரும்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி சாலையோர புளியமரத்தில் மோதியயது. இதில் பஸ்சின் முன்புறம் முற்றிலும் நொறுங்கியது. விபத்தில் பஸ் டிரைவர் திவாகர் (38), கீழ்பட்டியை சேர்ந்த திவாகர்(25), செல்வி(40), சந்திரலேகா(25), ஜலேந்திரா(42), லாவண்யா(30), அஸ்வினி(12), சஞ்சனா(8), திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த நதியா(37), பூவரசன்(26), ஜோதி(55), வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த குபேந்திரா(52), சபர்ணியா(25), புருஷோத்தமன்(69), சரஸ்வதி(55), பாவை(1), சர்மி(11), மகா(10), சித்ரா(46), சுமித்ரா(40), நர்மதா(21), சுஜய்(25), சாமுண்டீஸ்வரி(29), மகேஸ்வரி(43), அமர்நாத்(25), தனலட்சுமி(40), வாணி(37), தமிழரசு(24), ஷாகினி(23), மகாலட்சுமி(19), கண்ணகி(50), அசோகன்(34), அரவிந்தன்(10), ராஜேந்திரன்(52), ரம்யா(33) உட்பட 37 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு செய்யாறில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், எஸ்ஐ கன்னியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post செய்யாறு அருகே கோயிலுக்கு சென்ற சுற்றுலா பஸ் மரத்தில் மோதி விபத்து பெண்கள் உள்பட 37 பக்தர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Seiyaru ,Vellore ,Tirupathur ,Melmaruvathur ,Don't Do ,Vellore District Apartment ,Taluga Kalpathi ,Akaramsheri ,Don't ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்