×

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு கீழ்பவானித் திட்டப் பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக பாசன நிலங்களுக்கு 11500 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 07.01.2024 காலை 8.00 மணி முதல் 01.05.2024 காலை 8.00 மணி வரை திறப்பு மற்றும் நிறுத்தம் முறையில், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Bhavanisagar Dam ,Erode District ,Erode ,Chenneshamudram ,Erode District Bhavanisagar Dam ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...