×

அரிவாளை காட்டி போலீசிடம் இருந்து தப்பிய 2 ரவுடிகள் நெல்லை அருகே பிடிபட்டனர்..!!

நெல்லை: நெல்லை பெருந்துறை அருகே போலீசிடம் இருந்து தப்பிய ரவுடிகள் நெல்லை அருகே பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட சிவசுப்பு, முத்து மணிகண்டன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை களக்காட்டில் நடந்த கொலையில் தொடர்புடைய 5 ரவுடிகள் பெருந்துறை அருகே காலையில் பதுங்கியிருந்தனர். தகவலை அடுத்து நெல்லையில் இருந்து விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ மற்றும் 6 போலீசார், ரவுடி கும்பலை சுற்றி வளைக்க முயற்சித்தனர்.

பெருந்துறை குள்ளம்பாளையத்தில் பதுங்கி இருந்த சிவசுப்பு உள்பட 5 ரவுடிகளை பிடிக்க முயன்றபோது தாக்குதல் நடத்தப்பட்டது. சிவசுப்பு அரிவாளை கொண்டு போலீசாரை தாக்க முயன்றபோது பாதுகாப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார். தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அரிவாளை காட்டி தப்பிய 5 ரவுடிகளில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post அரிவாளை காட்டி போலீசிடம் இருந்து தப்பிய 2 ரவுடிகள் நெல்லை அருகே பிடிபட்டனர்..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai Perundurai ,Sivasubpu ,Muthu Manikandan ,Nellai Government Hospital ,Nellai Kalakkad, Perundurai ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...