×

அண்ணனைப் போல யாரும் இல்லை.. என்னிடம் ஒரு சகோதரரை போல் பழகி வந்தார் : விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா!!

சென்னை : நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் கோயம்பேடு அருகே தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண் கலங்கியபடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்நது கண்ணீர் மல்க பேட்டி அளித்த அவர், “”அண்ணனின் இந்த பிரிவு ரொம்ப துயரமானது. ஆரம்பகாலக்கட்டத்தில் விஜயகாந்த் உடன் ‘பெரியண்ணா’படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் தட்டில் இருந்து உரிமையாக எனக்கு சாப்பாடு எடுத்து வைத்தார். நீ நடிக்கிறார் உனக்கு சக்தி வேண்டும் என்று கூறினார்.

நட்சத்திரம் என்றாலே விலகி இருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் எல்லோரையும் அருகில் வைத்திருப்பார். அவரை மறுபடியும் சந்தித்து உட்கார்ந்து பேச முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. கேப்டன் விஜயகாந்த்தை இழந்தது வருத்தமானது; அவரை போல் இனியொருவரை பார்க்க முடியாது. விஜயகாந்த் என்னிடம் ஒரு சகோதரரை போல் பழகி வந்தார்; அவரது மறைவு பேரிழப்பு. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். எப்போதும் அவரின் நினைவு இருக்கும். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு, எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. எந்த நேரத்திலும் விஜயகாந்தை அனைவரும் அணுக முடியும்,”இவ்வாறு பேசினார்.

The post அண்ணனைப் போல யாரும் இல்லை.. என்னிடம் ஒரு சகோதரரை போல் பழகி வந்தார் : விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா!! appeared first on Dinakaran.

Tags : Suriya ,Vijayakanth ,Chennai ,Democratic Party of India ,Legislative Assembly ,Koyambedu ,Surya ,
× RELATED இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: வாலிபர் சிறையில் அடைப்பு