தூத்துக்குடி: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி ஐ.டி. ஊழியர் சம்மேளனம் பேரணி நடத்தி வருகின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ஒன்றிய, மாநில அரசு கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பேரணி நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசு காலி பணியிடங்களில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு பிராந்திய அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றும் நாளையும் நடக்கும் பேரணியை வருமான வரித்துறை ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் வெங்கடேசன் தொடங்கி வைத்துள்ளார்.
The post பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி ஐ.டி. ஊழியர் சம்மேளனம் பேரணி appeared first on Dinakaran.