×

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கொலை குற்றவாளியை பிடிக்கச் சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

ஈரோடு: கொலை குற்றவாளியை பிடிக்க வந்த நெல்லை போலீசாரை அரிவாள் காட்டி ரவுடி கும்பல் மிரட்டியுள்ளது. நெல்லை களக்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் பெருந்துறை அருகே பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. கொலை வழக்கில் தொடர்புடைய சிவசுப்பு மற்றும் 4 பேர் பெருந்துறை அருகே குள்ளம்பாளையத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலை அடுத்து நெல்லையில் இருந்து விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ மற்றும் 6 போலீசார், ரவுடி கும்பலை சுற்றி வளைக்க முயற்சித்தனர். சிவசுப்பு அரிவாளை கொண்டு போலீசாரை தாக்க முயற்சித்ததாக தகவல் தெரிவித்தனர். பாதுகாப்புக்காக உதவி ஆய்வாளர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் இல்லை என்றும் கொலையாளிகள் 4 பெரும் தப்பி ஓடினார் என்று தகவல் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கொலை குற்றவாளியை பிடிக்கச் சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Perudura, Erode district ,Erode ,Rawudi ,Nella Kalakkad ,Perudura ,Erode district ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...