×

வேங்கைவயல் வழக்கு ஜன.19க்கு ஒத்திவைப்பு

 

புதுக்கோட்டை, ஜன.5: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் கடந்த 2022 டிசம்பர் மாதம் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், வேங்கைவயல் மக்களுக்கு அப்பகுதியில் உள்ள டீ கடையில் இரட்டைக் குவளை பயன்படுத்தியதாகவும், அய்யனார் கோயிலுக்குள் வழிபட அனுமதிக்கப்படவில்லை எனவும் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வெள்ளனூர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு வண்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. நேற்று விசாரணைக்கு வந்த இவ்விரு வழக்குகளுக்கும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து ஜன.19ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். இதற்கிடையில், இவ்விரு வழக்கும் முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதால் மீண்டும் விசாரிக்க வேண்டும் என வேங்கைவயல் பகுதியினர் சார்பில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வேங்கைவயல் வழக்கு ஜன.19க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Venkaiyal ,Pudukottai ,CBCID ,Venkaiwayal ,Pudukottai district ,Venkaivyal ,
× RELATED வேங்கைவயல் விவகாரம் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை