×

காரைக்காலில் கார்னிவல் திருவிழா வருகிற 14ம் தேதி தொடங்குகிறது

 

காரைக்கால்,ஜன.5: காரைக்காலில் கார்னிவல் திருவிழா வருகிற 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. இது தொடர்பாக புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி சுற்றுலாத்துறை, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் காரைக்கால் கார்னிவல் என்ற திருவிழாவை கொண்டாடி வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான கார்னிவல் திருவிழாவை வருகிற ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி காரைக்கால் கடற்கரை, முனிசிபல் மைதானம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்படவுள்ளது. இவ்விழா செலவினங்களுக்காக ரூ.93.90 லட்சம் நிதியை முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில் காரைக்கால் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சினிமா கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான கைப்பந்து போட்டிகள், மாரத்தான் போட்டிகள், சைக்கிள் வேகப்போட்டிகள் மற்றும் பல கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. காரைக்கால் சுற்றுலா வளர்ச்சிக்காக நடப்பு நிதியாண்டில் கூடுதல் நிதியை முதல்வர் ரங்கசாமி வழங்கியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post காரைக்காலில் கார்னிவல் திருவிழா வருகிற 14ம் தேதி தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Carnival festival ,Karaikal ,Puducherry Tourism Minister ,Puducherry Tourism ,Karaikal Carnival ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...