×

650 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ராசிபுரம், ஜன.5: ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளில், ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக, நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ேபாலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள், அலவாய்பட்டி பிரிவு சாலை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, 13 மூட்டைகளில் 650 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தப்பட்ட ரேஷன் அரிசி, ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு, கூடுதல் விலைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. ரேஷன் அரிசியை கடத்திய ராசிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராஜா(44), தங்கவேல் மகன் அருண்குமார்(31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 650 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal Civil Supplies Crime Investigation Department ,Vennandur ,Civil Supplies Division ,Alawaipatti Divisional Road ,Dinakaran ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...