×

தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் நாடாளுமன்ற தேர்தலில் அறிவிப்பார்கள்: பொன்குமார் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் எதையும் பிரதமர் மோடி கவனத்தில் கொள்ளாமல், அதற்கான பதில் கூறாமல், தமிழ் மொழிக்காக நான் பேசி வருகிறேன், என்றது தமிழ்நாட்டு மக்களை அப்பட்டமாக அவமதிக்கும்-புறக்கணிக்கும் செயலாகும். பிரதமர் மோடி, தமிழ் மொழியும், தமிழ்நாட்டு மக்களையும் நேசிப்பதாக கூறுவதும்; தமிழில் சில வார்த்தைகளைப் பேசுவதும், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் அரசியல் சித்து விளையாட்டு. தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அறிவிப்பார்கள்.

The post தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் நாடாளுமன்ற தேர்தலில் அறிவிப்பார்கள்: பொன்குமார் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Ponkumar ,Chennai ,Tamil Nadu Farmers-Workers Party ,President ,Modi ,Chief Minister ,M. K. Stalin ,Trichy ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...