×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு இடம் தரக்கூடாது – பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அரசு இடம் தரக் கூடாது. உச்சநீதிமன்றத்தில் விசாரணையின் போது வலுவான வாதங்களுடன் எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு இடம் தரக்கூடாது – பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Thoothukudi ,PMK ,Ramadoss ,CHENNAI ,Govt ,Supreme Court ,BJP ,Founder ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...