×

3வது சம்மனும் புறக்கணிப்பு.. கைது செய்யப்படுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லி முதல்வர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!!

டெல்லி : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு நவ. 2 மற்றும் டிச. 21 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அந்த இரண்டு விசாரணைகளுக்கும் ஆஜராகாமல் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்திருந்தார்.

இந்நிலையில் அமலாக்கத்துறை அனுப்பிய 3வது சம்மனை ஏற்று முதல்வர் கெஜ்ரிவால் நேற்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 3வது முறையாக விசாரணையை புறக்கணித்தார். ‘மாநிலங்களவை எம்பி தேர்தல், குடியரசு தினவிழா ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதால் விசாரணைக்கு ஆஜராகமுடியாது. இந்த வழக்கு தொடர்பாக என்னிடம் இருந்து ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கேள்விகளை அனுப்பி வையுங்கள். அவற்றுக்கு விளக்கம் அளிக்கிறேன்,’ என அமலாக்கத் துறைக்கு அவர் கடிதம் அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது சம்மன் அளிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. 4வது சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை என்றால் அவரை இன்றே கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் கெஜ்ரிவால் வீட்டை முற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் இல்லத்திற்கு செல்லும் சாலைகள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே அமலாக்கத்துறை விவகாரம் தொடர்பாக இன்று பகல் 12 மணிக்கு கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

The post 3வது சம்மனும் புறக்கணிப்பு.. கைது செய்யப்படுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லி முதல்வர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Delhi ,Chief Minister ,Enforcement ,Delhi Chief ,Minister ,Aam Aadmi Party ,Delhi CM ,
× RELATED அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில்...