×

புதிய துறைமுகத்தில் லோடு ஏற்றும் இயந்திரம் கவிழ்ந்து சூபர்வைசர் பலி

ஸ்பிக்நகர், ஜன. 4: தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் லோடு ஏற்றும் இயந்திரம் கவிழ்ந்த விபத்தில் சூபர்வைசர் பலியானார். முத்தையாபுரம் தங்கமணி நகரைச் சேர்ந்த பிள்ளையாண்டி மகன் இசக்கிமுத்து (39). தனியார் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சூபர்வைசராக வேலை பார்த்து வருகிறார். தூத்துக்குடி புதிய துறைமுகம் 9வது பெர்த்தில் பிரன்ட் எண்ட் லோடர் (எப்எல்) மூலம் லாரியில் கரி லோடு ஏற்றும் பணி நடைபெற்று வந்தது. நேற்று மதியம் எப்எல் டயர் பஞ்சரானதால் அதை கழட்டும் போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த இசக்கிமுத்து மீது சரிந்தது. இதில் படுகாயமடைந்த இசக்கிமுத்துவை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இசக்கிமுத்துவுக்கு ஒரு மகள் உள்ளார். இதுகுறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதிய துறைமுகத்தில் லோடு ஏற்றும் இயந்திரம் கவிழ்ந்து சூபர்வைசர் பலி appeared first on Dinakaran.

Tags : New Port Spiknagar ,Tuticorin New ,Port ,Ishakhimuthu ,Pillaiyandi ,Thangamani ,Muthiyapuram ,Dinakaran ,
× RELATED புதுச்சேரிக்கு மாற்றம் தேவை என்பதை...