×

செங்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பலி

செங்கோட்டை,ஜன.4: செங்கோட்டை அருகே குலசேகரபட்டி சடையப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பலவேசம் மகன் முத்து (60). கட்டிட தொழிலாளியான இவர் செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் பகுதியில் குமார் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் தண்ணீர் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக இரும்பு பைப்பை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புளியரை சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post செங்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Red Fort ,Sengottai ,Balavesam Makan Muthu ,Kulasekharapatti Sadayappapuram South Street ,Kumar ,Kesavapuram ,
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...