×

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

தேன்கனிக்கோட்டை, ஜன.4: அஞ்செட்டி போலீசார் டி.ராசிபுரம், ஏரிகோடி பகுதிகளில் ரோந்து சென்ற போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் 2பேரும் தலா 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் டி.ராசிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (29) என்பதும், மற்றொருவர் ஏரிகோடியைச் சேர்ந்த பாண்டுரங்கன் (60) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Anchetty ,D. Rasipuram ,Erikodi ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு